26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொட்டகலையில் பாரிய விபத்து:ஒருவர் மரணம்!

நுவரெலியா திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் மற்றும் முச்சக்கரவண்டி, நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த ஒருவரும், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் மாத்திரம், மேலதிக சிகிச்சைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார்.

இதில், கொட்டகலை பொரஸ்கிரிக் தோட்டத்தை சேர்ந்த, 35 வயதுடைய ஆர்.சுரேஷ்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியில், பத்தனை பகுதியில் இருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், ஹட்டனில் இருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ஒன்றும், கொட்டகலை சுரங்க பாதை பகுதியில், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன, பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளது.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles