26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொலம்பியாவில் சுரங்கம் இடிந்ததால் 11 ஊழியர்கள் பலி, 10 பேரை காணவில்லை

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்ததால் குறைந்தபட்சம் 11 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காணமல் போயுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலுள்ள சுதாதவ்சா பகுதியிலுள்ள சுரங்கத்தில் நேற்று புதன்கிழமை சுரங்கமொன்று இடிந்தது..

இச்சம்பவத்தில் 11 ஊழியர்கள் உயிரிழந்தனர். இருவர் மீட்கப்பட்டனர். மேலும் 10 ஊழியர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கண்டுபிடிப்பதற்கான அவசர தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் துரதிஷ்டவசமான அனர்த்தம் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles