நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்டவரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நிலைமை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, பஞ்சிகாவத்தை, பொரளை, நகரமண்டபப் பகுதி, தெமட்டகொட, வெள்ளவத்தை உள்ளிட்ட பல இடங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனசாரதிகள், பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்டவரிசையில் வாகனசாரதிகள் காத்திருக்கின்றனர்.