சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துதல் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கபோட் நிறுவன அனுசரணையில் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் மைகலின் ஒழுங்கமைப்பில் கரிதாஸ் எகெட் நிறுவன இயக்குநர் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார் தலைமையில் செயலமர்வு நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு பிரதேச சர்வ சமயக் குழுக்கள், கிராம மட்ட சமாதான விழிப்பு குழுக்கள், பல் சமய இளைஞர் குழுக்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் செயலமர்வில் பங்கெடுத்தனர்.
கபோட் நிறுவன அனுசரணையில் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிகழ்ச்சி திட்ட ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இறுதி நாள் செயலமர்வில் வளவாளராக
பெனடிக் ஜெபமாலை கலந்து கொண்டார்.