குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.