31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி பாரிய போராட்டம்!

கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நுவரெலியாவில் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், அங்கிருந்து வாகன பேரணியாக நுவரெலியா-பதுளை பிரதான வீதி ஊடாக நுவரெலியா நகரை நோக்கி வருகை தந்தனர்.

இதன்போது கல்வி சமூகத்தினர் எதிர் நோக்கும் கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை
ஏந்தி கோஷம் எழுப்பினர்.

பேரணியில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ ஆகிய கல்வி வலயங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு உட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றுபட்டு கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles