33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டனை முன்னிட்டு, சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய கலாசார விளையாட்டு விழாவை
நடாத்துவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சினி சிறிகாந்த் மற்றும் நவரூபரஞ்சினி முகுந்தன் ஆகிய
இருவரின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வை நடத்துவதற்காக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் மேற்பார்வையின் கீழ் இராணுவம், பொலிஸ், மாநகர சபை, லயன்ஸ் கழகம், சமூக அமைப்புக்கள், கலாசார பிரிவு, ஊடகப்பிரிவு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கிய செயற்பாட்டுக்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
மரதன் ஓட்டம், மெதுவான சைக்கிளோட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், கயிறு இழத்தல், தலையணைச்சமர், கிராமிய பாடல், மிட்டாய் ஓட்டம், சங்கீத கதிரை போன்ற பல்வேறு போட்டிகளை
நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்ட பல துறை சார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles