27 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்ப்திகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்

மட்டக்களப்பு பன்சேனை, சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த விஷேட நடவடிக்கையின்போது 17 பரல்களில் 3400 லீற்றர் கோடா, 75 லீற்றர் கசிப்பு, மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட்ட பொலிஸ். அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைவாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்ப்திகாரி நிஷாந்த ஹப்புகாமியின் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles