இலங்கைக்கு மேலும், 2 மில்லியன் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசிகள், இன்று நாட்டை வந்தடையும் என, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இதுவரை 9.1 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளை, இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது.
இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசிகள், பல மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
குருணாகல் மாவட்டத்திற்கு 4 இலட்சம், காலி மாவட்டத்திற்கு 2 இலட்சத்து 75 ஆயிரம், மாத்தறை, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு, தலா 2 இலட்சம், அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம், புத்தளம், பொலன்னறுவை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் என, கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.