சுவிற்சர்லாந்தில் மூன்று முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சட்டமூலங்களுக்கான பொதுசன வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றாலும் அதில் முக்கியமாக மக்கள் பேசுபொருளாக இருப்பது பர்தா எனப்படும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கான சட்டமூலம் ஆகும். இச்சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை எவரும் அணிய முடியாது. இருந்தாலும் சுகாதாரகாரணங்கள்,காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இத்தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் கருத்தில், முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில் ஒன்றாக வாழ்வதில் முரண்படுகிறது; இது பெண்களின் அடக்குமுறையின் வெளிப்பாடாகும், எனவே சம உரிமைகளுக்கான உரிமையுடன் பொருந்தாது; இறுதியாக, மறைப்பதற்கான தடை பாதுகாப்பு மற்றும் குற்றங்களுக்கு எதிரான காவற்துறையின் நடவடிக்கைகளுக்கு இது உதவுகிறது.
சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கமும் பாராளுமன்றமும் இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களுளை கேட்டுள்ளது. அவர்களின் பார்வையில், முகத்தை மூடுவது சுவிட்சர்லாந்தில் ஒரு சிறிய நிகழ்வு மட்டுமே. கூடுதலாக, இந்த பகுதியில் விதிகளை வெளியிடுவது கன்டோன்களின் பொறுப்பாகும். உள்ளூர் நிலைமைகளை அவர்கள் நன்கு அறிவார்கள். கூடுதலாக, தற்போதைய சட்டத்தின் கீழ், ஒரு பெண்ணை முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தும் எவரும் கிரிமினல் குற்றமாகும். ஆகவே இந்த புதிய சட்டமூலம் அவசியமற்றது. இச்சட்டமூலத்திற்கு பதிலாக புதிய சட்ட முன்பொழிவை அரசாங்கம் வைக்கின்றது. அதாவது இவ்வாறான ஆடைகளை அணிவோர் அடையாள சோதனையின் போது மக்கள் தங்கள் முகங்களை அதிகாரிகளுக்கு காட்ட வேண்டும். கூடுதலாக, எதிர் முன்மொழிவு பெண்களின் உரிமைகளை வலுப்படுத்த நிதி திட்டங்களுக்கு வழங்குகிறது. மக்களல் இச்சட்டமூலம் நிராகரிக்கப்படும்போது இந்த எதிர் முன்மொழிவை தாம் நடைமுறை படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் கொடுத்துள்ளது.
இருப்பினும் சுவிற்சர்லாந்தின் தேசியவாத கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி இச்ட்டமூலத்திற்கு ஆதரவாக கடந்த சில வாரங்களாக பாரிய பரப்புரைகளை மேற்கொண்டுள்ளது ஏற்கனவே நாற்புறமும் தூபிகளை கொண்ட மசூதிகளின் கட்டுமானத்திற்கான தடை சட்டம் இந்த கட்சியால் 2009 ல் கொண்டு வரப்பட்டு மக்களின் ஆதரவுடன் (57.7 வீத ஆதரவு) நிறைவேற்றபட்டது.
பாராளுமன்றத்தில் 77 வாக்குக்கள் இச்சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராக 133 வாக்குகளும் கிடைத்துள்ளன மாநிலங்கள் அவையில் ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில் மக்களின் முடிவுகளுக்காக சுவிற்சர்லாந்து காத்திருக்கிறது.