மலாவி நாட்டை இரண்டாவது முறையாக தாக்கிய பிரெடி சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல பகுதிகளும் மூழ்கி வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வர்த்தகத் தலைநகரான பிளாண்டயரில் பல சிறுவர்கள் உட்பட அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியே பெரும்பாலானவர்கள் பலியாகியுள்ளனர்.
மோசமாக பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த சூறாவளியால் அண்டை நாடான மொசம்பிக்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.