32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு சஜித்திடமிருந்து சாதகமான பதில்!

நாட்டில் சர்வகட்சி குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும், அதில் எதிர்க்கட்சிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அடுத்தவருட சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என்று சஜித் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வினை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடனேயே தாமும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles