13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சங்கரத்தையில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்திலிருந்து ஆரம்பமான பேரணி, சங்கரத்தை ஊடாக வட்டுக்கோட்டையை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து சுளிபுரம், சங்கானை போன்ற பகுதிகளில் மக்களிடையே துண்டு பிரசுரங்களும் கையளிக்கப்பட்டதோடு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் கனகரட்ணம், காண்டீபன், வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர், பிரதேசபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.