தமிழ் முஸ்லீம் உறவை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கிடையே இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழ் முஸ்லீம் உறவுகளை பிரித்து தன்னுடைய அரசியல் லாபத்தை அடைத்து கொள்ளுவதாக உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கல்முனையில் உலமா கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.