போலியான முறையில் தனது கையொப்பத்தை பயன்படுத்தி வேட்பாளர் பட்டியலொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில், கொழும்பு, தெஹிவளை – கல்கிஸை மாநகர சபைக்காக பொய்யான வேட்பாளர் பட்டியல் தாக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டம் என்று வலியுறுத்தியே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.