27 C
Colombo
Wednesday, April 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தலைமைத்துவ பயிற்சிகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையினரால் நடத்தப்பட்ட முதலுதவி, தலைமைத்துவம், வீதி ஒழுங்கு, ஆன்மீகம் தொடர்பான பயிற்சிகளை நிறைவுசெய்த 25 மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்லூரியின் முதல்வர் வை.ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக கிருபா சாரதி பயிற்சி பாடசாலையின் அதிபர் அ.கிருபாகரன், இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ், இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை நிர்வாக திட்டமிடல் பொறுப்பாளரும் பயிற்சி ஆசிரியருமான ம.அன்பரசன், இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய கண்காணிப்பாளர் கலாநிதி வை.ஜெகதாஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles