திரிபோசா வழங்கப்படாமையால், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு – சமல் சஞ்சீவ

0
115

திரிபோசா வழங்கப்படாமையால், 6 மாதம் முதல் 3 வயது வரையான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கும் அதிகமான, 3 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு, பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.
ஆனால், திரிபோசா வழங்கப்படவில்லை.
அதனால், இந்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே, அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருகின்றனர் என விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.