33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலை கன்னியா பகுதியில் டிப்பர் மற்றும் பவுசர் மோதி விபத்து

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதி கன்னியா பகுதியில் டிப்பர் மற்றும் பவுசர் மோதி விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் இருந்து அனுராதபுரம் ஊடாக கொழும்பு செல்லவிருந்த பவுசர் மற்றும் ஹொரவப்பொத்தானையிலிருந்து சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியதினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது டிப்பர் வாகனத்தின் சாரதியான அம்பலாந்தொட – தெஹிகஹலந்த பகுதியைச் சேர்ந்த (42வயது) எஸ்.பீ.எஸ்.சுசந்த என்பவர் இரு கால்களும் உடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பவுசரில் 20,000 லீட்டர் எண்ணெய் இருந்ததாகவும் 80 இலச்சம் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles