அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அரசாங்கத்தின் கிராம சக்தி திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும், 13 பெண் சுயதொழில்முயற்சியாளர்களுக்கு கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கடனுதவி வழங்கும் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் பிரதேச செயலகத்தில்
இன்று இடம்பெற்று இருந்தன.
கடனுதவியானது சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி கிராமப் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன.
திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் 03 கிராம சேவையாளர் பிரிவில் செயற்பட்டுவரும் இளந்தளீர் கிராம சக்தி சங்கத்தின் ஊடாக 13 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சுமார் 12 இலட்சத்தி 20 ஆயிரம் ரூhப நிதி வழங்கப்பட்டது.
நிகழ்வில் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நவலோகிதன்
உட்பட பலரும் கலந்துகொண்டனர்.