அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட இ.கணேசமூர்த்தி, இன்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில், புதிய நிர்வாக அதிகாரியின் கடமையேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
புதிய நிர்வாக உத்தியோகத்தரான இ.கணேசமூர்த்தி காரைதீவு பிரதேச செயலகத்தில் நிதிப்பிரிவில் முகாமைத்துவப் உதவியாளராக கடமையாற்றி
அண்மையில் நடாத்தப்பட்ட சுப்ரா பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு நிர்வாக உத்தியோகத்தராக
நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.