அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பபட்ட யுவதிகளுக்கு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் தொடர்பான ஒருநாள் வாண்மை விருத்தி முன்னோடிப் பயிற்சி நெறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் பயிற்சி நெறியானது பவூண்டேரா பவூண்டேஷனின் மாவட்ட இணைப்பாளர் வி.வாமதேவன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.
இவ் பயிற்சி செயலமர்வானது பவூண்டேரா பவூண்டேஷன் நிதிப் பங்களிப்புடன் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 யுவதிகளுக்கு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை உள்ளடக்கிய முன்னோடிப் பயிற்சி நெறியாக இவ் பயிற்சிகள் வளவாளர்களால் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக வளவாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் யுவதிகள் என பலர் கலந்து கொண்டு இருந்தனர்.