33 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருப்பெருந்துறை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர்
ஆலயத்தின் மஹா சங்காபிசேகம்

மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் மஹா சங்காபிசேகம் மற்றும் சனீஸ்வரர் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலய தர்மகர்த்தா கி.மகேஸ்வரனின் வழிகாட்டலின் கீழ்; இந்த நிகழ்வு நடைபெற்றது.

கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகள் கொண்டு மஹா சங்காபிசேகம் நடாத்தப்பட்டதுடன் இதன்போது சனீஸ்வரர் பெருமானுக்கு தனி ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் மற்றும் நவக்கிரக ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன.
இதன்போது பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேட அபிசேகம் நடைபெற்றதுடன் விசேட யாகம் மற்றும் 1008சங்களுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று அபிசேகம் சிறப்பாக நடைபெற்றன.

ஆலயத்தின் கும்பாபிசேக ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த சங்காபிசேகம் நடாத்தப்பட்டதுடன நிகழ்வினை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles