துரித உப உணவுப் பயிர்களை பயிரிடும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் துரித உப உணவுப் பயிர்கள் அறுவடை மற்றும் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் விநாயகபுரம் 04 கிராமத்தில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.
2அரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய மரவள்ளி செய்கைகள் பிரதேசம் முழுவதும் பயிரிடும் வேலைத்திட்டம் 22கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமக்கான நாளாந்த தேவையான மரக்கறிப்பயிர்ச் செய்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.அரசரெத்தினம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் சுமார் ஆறாயிரம் சமுர்த்திக் குடும்பங்களை கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் துரித உப உணவு உற்பத்தியை முன்னெடுப்பதன் ஊடாக பிரதேசம் நாடு என்ற அடிப்படையில் உணவுப் பஞ்சம் ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன் இவ் வேலைத்திட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளரின் ஆலோசனைகளுக்கு அமைவாக துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.