மலையக மக்களின் அபிவிருத்தியில், மிகவும் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் அரசாங்கத்தில், சேவை செய்யக்கூடிய ஒரு அமைச்சை பெற்றுக்கொள்ளும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று, நுவரெலியா கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.