அரசுக்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று, இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் சுமார் 150ற்கும் மேற்பட்ட ஊழியர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது, போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை விற்பதை உடனே நிறுத்து, அரசாங்கமே இந்த பண்ணையை தொடர்ந்து நடத்த வேண்டும், இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும் பண்ணையை தனியாருக்கு விற்காதே என வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயத்தில் அரசாங்கம் தலையீட்டு, தொடர்ந்தும் அரசாங்கமே இந்த பண்ணையை நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.