பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பரத நாட்டிய போட்டியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் – ஏழாலை மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் இ.புஸ்பரட்ணம் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஏழாலை துர்க்காதேவி ஆலய முன்றலில் இருந்து, வெற்றியீட்டிய மாணவர்களும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி செ.சிவகுமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.