தேர்தலை ஒத்திப்போடும் நிலைப்பாட்டில் தாங்கள் இல்லை எனவும், வெற்றியை அனுபவித்தது போல் தோல்வியை அனுபவிப்பதற்கும் தாங்கள் தயார் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘தேர்தலை நடத்த வேண்டும் என்று சொல்பவர்களுக்குச் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நிறுத்துமாறு கூறுவதற்கு உரிமை இல்லை. இந்தக் கொண்டாட்டத்திற்கு 20 கோடி ரூபாதான் செலவு. ஆனால் தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா செலவு. இதில் எது அதிக தொகை என்று பார்க்க வேண்டும். போர் வெற்றியைக் கொண்டாடுவது போல் சுதந்திர தினமும் கொண்டாடப்படவேண்டும். எமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என ஜகத் குமார தெரிவித்துள்ளார்.