நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பிரதான தொழில்சங்கங்களின்; பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசவுள்ளார்.
அடுத்த வார முற்பகுதியில் இந்தப் பேச்சு நடைபெறும் என ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலம் தொழில்சங்கங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட வரியை உடனடியாக திருத்த வேண்டும் என கோரி 47 பிரதான தொழில்சங்கங்கள் நேற்று முன்தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.