ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் த புதிதாக பதவி ஏற்றுள்ள யாழ் மாவட்ட கட்டளை தளபதி யாழ் மறை மாவட்ட ஆயரை சந்தித்தபோது ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார்
அதாவது மிதிவெடி அகற்றிக் கொண்டிருக்கின்றோம் அது விரைவாக செயல்படுத்த முடியாதநிலை காணப்படுகின்றது தற்பொழுது பொருளாதார நெருக்கடி நிலையினால் அவை அனைத்தும் தடைப்பட்டுள்ளன மிதிவெடி அகற்றிய பின்னர் மக்களிடம் கையளிக்க முடியும் தங்களுடைய அரச தலைவரோடும் இதைப்பற்றி கதைத்த போதும் அதை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது
எனினும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக அது சாத்தியமாகவில்லை எனினும் தற்போதைய நிலையில் அது சாத்தியப்படக்கூடிய விடயம் தாங்கள் தொடர்ச்சியாக அப்பகுதியில் பொருளாதார நெருக்கடியிலும் அவ்விடங்களில் மிதிவெடியினை அகற்றி வருகின்றோம்
மிதிவெடியினை அகற்றிய பின் அந்த இடத்தினை மக்களுக்கு கையளிப்போம் என யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.