26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாடு கொரோனா தொற்றிலிருந்து விடுபட யாழில் சிறப்பு வழிபாடுகள்

கொரோனா தொற்றிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுபட வேண்டி, யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சியம்மன் ஆலயத்தில் யாழ்.மாவட்டச் செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இன்றுகாலை சிறப்பு பூசைவழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள அருளாசி வேண்டி, நாடு முழுவதிலுமுள்ள இந்து ஆலயங்களில் விஷேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் யாழ். மாவட்டச் செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சியம்மன் ஆலயத்தில் இன்று காலை விஷேட வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட செயலக கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்த பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles