நாவற்குழியில் ராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சியில் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார்.
குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை புரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிசார் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த சிப்பாயின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.