தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும், அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாகவும் நீதி அமைச்சர் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வெளி நாட்டிலிருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நன்றாக கதை அளந்து இருக்கின்றார் என தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஒலிப்பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.