மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஹொலிறூட் பிரசேத்தில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.