நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தூங்கிக்கொண்டு இருக்காது, அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களினதும் களஞ்சியசாலைகளை சோதனை செய்யும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்களே இன்று ஊடகங்களின் முன்னால் வந்து முட்டிமோதிக் கொள்கின்றனர்.
பாரிய அளவிலான அரிசி மாபியாக்காரர்கள் இன்று மோதிக்கொள்கின்றனர்.