26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நுவரெலியா – சீத்தாஎலியவில் தியான மண்டபம்

நுவரெலியா – சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர்த் தடாக திறப்பும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும், முத்திரை வெளியீட்டு நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரட்ணாயக்க, யதாமினி குணவர்தன, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, உதவி தூதுவர் எஸ்.அதிரா ஆகியோரும் நுவரெலியா டெல்லி ரோட்டறி கழக உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், பக்த அடியார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles