தொடங்கொட பிரதேசத்தில் வீட்டின் படுக்கையறையிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின்
உடல் மீட்கப்பட்டிருந்த நிலையில், அது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான
நீதிமன்ற மற்றும் மரண பரிசோதனை இன்றையதினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வினவிய போதே பொலிசார் டான் செய்திகள் தொலைக்காட்சிக்கு இதனை தெரிவித்துள்ளனர்.
தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவத்த கொட வீடொன்றில் படுக்கையறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில்
உயிரிழந்த பெண்னொருவரின் சடலம் நேற்றையதினம் மீட்ககப்பட்டிருந்தது.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்த குறித்த பெண் 54 வயதுடைய அதேபகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் தலை மற்றும் கைகளில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் களுத்துறை நீதிபதியினால் நீதிமன்ற பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் உடல் மரண பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கொட பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.