எதிர்வரும் 4 ஆம் திகதி, சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும், சுதந்திர தின கரி நாள் போராட்டத்திற்கு, வட பகுதியில், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட பொது மக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தினர், தமது ஆதரவை வழங்கியுள்ளனர். சங்கத்தை சேர்ந்த நிர்வாகத்தினரும் அங்கத்தவர்களும் ஆதரவை வழங்கியுள்ளதுடன், ஊர்வலத்திலும் பங்கேற்க உள்ளதாக, வட பகுதியில், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட பொது மக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்க செயலாளர் து.கமலநாயகி அறிவித்துள்ளார்.