பாசையூர்- பூநகரி வரையான கடற்பகுதியில் கடற்றொழிலை வாழ்வாதாரமாக் கொண்டு தொழிலை மேற்கொள்ளும் பாசையூர் கடற்றொழிலாளர்கள் தமது வாழவாதாரம் பாதிப்படைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிறகு வலைத் தொழில்கள் மேற்கொள்ளும் பகுதிகளில் நாரா நிறுவனம் அட்டைப் பண்ணைகளை அமைப்பவர்களுக்காக இடங்களை அடையாளப்படுத்தியுள்ளமை தொடர்பாகவும் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் பாசையூர் மீனவர்கள் காலம் காலமாக மேற்கொள்ளும் தொழிலை இழக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இயற்கையாக அட்டை கிடைக்கும் பகுதிகளில் சீனா அட்டைகளை விளைவிப்பதற்காக சீனர்களுக்கான அட்டைப் பண்ணை அமைப்பற்கு நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அவ்வாறு மீறி அமைத்தால் கடலில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.