தமிழ்த் திரை இசையுலகில் முன்னணியாக விளங்கும் பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தேன். ஆனால், மிகச் சிறிய அளவிலான காட்சிகள் மட்டுமே படத்தொகுப்பில் இடம்பிடித்திருந்தன.
தற்போது ஏப்ரல் 28ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் எம்முடைய கதாபாத்திரமும் இடம்பிடித்திருக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன். அத்துடன் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்துக்காக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறேன்.
மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான், லைகா நிறுவனம் என திரையுலக முன்னோடிகளுடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்…”