26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் நீர்வேலியில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி கரந்தன் சந்திப்பகுதியில்

ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொதியுடன் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் பயணித்த  மோட்டார் சைக்கிளும்  விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மாங்குளம் பகுதியில் இருந்து  யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மாங்குளம் பொலிஸ்  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாங்குளம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட சந்தேக  நபரை பின்தொடர்ந்து வந்த விசேட அதிரடிப்படையினர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர் வேலி கரந்தன் சந்திப்பகுதியில் கைது செய்து கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் 

கைது செய்யப்பட்டவர் விசாரணையில் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுத்தப்படவுள்ளார்,

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles