26 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மக்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது!

கிளிநொச்சி பிரதேச மக்களை பயமுறுத்தி கூரிய ஆயுதங்களால் தாக்கி வீடுகள் மற்றும் உடமைகளை தாக்கி சேதப்படுத்தி கொள்ளையடித்து வந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பணம், மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் 21-32 வயதுடைய கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles