சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் 2022 ஆண்டுக்கான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது சிறுவர்களின் அறிவு மற்றும் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் முகமாக அறிவியல் சார்ந்த பொருட்களை காட்சி படுத்தும் அறிவியல் ஆக்க திறன் கண்காட்சி மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் இரண்டுநாள் நடாத்தப்பட்டது .
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் முகாமையாளர் பிரம்மச்சாரி நிரோஜன் ஜீ தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள் , பெற்றோர்களை இணைந்த ஏற்பாட்டில் இரண்டுநாள் நடைபெற கண்காட்சி நிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர் உட்பட அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள் ,பாடசாலை சிறார்கள் கலந்துகொண்டனர் .