32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு எரிபொருள் நிலையங்களில் பரிசோதனை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் எரிபொருளின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலை காரணமாக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பல மணி நேரங்கள் காத்திருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான உரிய பாதுகாப்பான இடங்களாக அனைத்து எரிபொருள் நிலையங்களும் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக இன்று பரிசீலனை செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து எரிபொருள் நிலையங்கள் பரீசீலினை செய்யும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன .

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரையின் கீழ் மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்களினால் இந்த பரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படடன

குறித்த எரிபொருள் நிலையங்களை பரிசீலனை செய்யும் களநடவடிக்கையில் , மாநகர சபை பொறியியல் பிரிவு , தீயணைப்பு படை பிரிவு ,மாநகர சபை சுகாதார பிரிவு மற்றும் அலுவலக நிர்வாக உத்தியோகத்தகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர முதல்வரின் பணிப்புரையின் கீழ் மேற்கொண்டு வரும் எரிபொருள் நிலையங்கள் பரிசீலனை செய்யும் நடவடிக்கை தொடர்பாகவும் மாநகர சபையினால் மட்டக்களப்பு கருவப்பங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான சந்தை தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்க படவுள்ளமை தொடர்பாகவும் மாநகர முதல்வர் தியாகராஜ சரவணபவன் கருதது தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles