மட்டக்களப்பு காத்தான்குடியில் மாணவர் ,மாணவியர்களுக்கான அல்குர்;ஆன் மனனப் போட்டி காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தினால் காத்தான்குடியிலுள்ள பகுதிநேர அல்குர்ஆன் மனன பீட மாணவர் மாணவியர்களுக்கான அல்குர்ஆன் மனனப் போட்டியாக இப் போட்டி நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் மௌலவி ஏ.ஜே.எம்.ஜவாஹிர் தலைமையில் இப் போட்டிகள் நடைபெற்றன.
இப் போட்டியில் காத்தான்குடியிலுள்ள பகுதிநேர அல்குர்ஆன் மனன பீட மாணவர் மாணவியர்கள் கலந்து கொண்டதுடன் அல்ஹாபிழ்கள் போட்டியின் நடுவர்களாக இருந்து இந்தப் போட்டியை நடாத்தினர்.
இதில் வெற்றி பெற்றோர்களுக்கு விரைவில் பரிசளிப்பு விழா நடாத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் மௌலவி ஏ.ஜே.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.