மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசக் கூட்டம் இன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,டெங்கு ஒழிப்பு, சுகாதாரம், சிறுவர் அபிவிருத்தி சமுர்த்தி உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.
கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் ஜாயிதா ஜலால்தீன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப் உட்பட திணைக்களங்களின் அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.