மட்டக்களப்பு காந்திபூங்காவில், அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம்
அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன்
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும்
செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.