மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபர் மௌலவி ஏ.சி.எம்.பௌசுல் அமீன் கடமைகளை
இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அதிபரின் கடமையேற்பு நிகழ்வில், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், முன்னாள் அதிபர் ஹசன் அலி, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின்
வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் உட்பட ஆசியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.