மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 3வது பிரதேச தினக் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
டெங்கு நோய் பரவல், மீனவர்களின் பிரச்சினைகள், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
சிறுவர் இல்ல மற்றும் பாடசாலைகளின் மாணவர்களுக்கு பல் மற்றும் கண் தொடர்பான மருத்துவ முகாம்களை
நடாத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரியிடம் பிரதேச செயலாளரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நிகழ்வில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டனர்.