மட்டக்களப்பு கித்துள் பிரதேசத்தின் முந்தானை ஆற்றின் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தலைமையிலான 12 பேர் கொண்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பிரதேசத்தின் முந்தானை ஆற்றின் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரம்
இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மணல் ஏற்றப்பட்ட நிலையில் நான்கு உழவு இயந்திரங்களுடன் மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தெரிவித்துள்ளார் .
குறித்த பிரதேசத்தில் மணல் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் சில நபர்கள் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள தகவலுக்கு அமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்கவின் ஆலோசனையின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் .