மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பாடான மருத்துவ இயந்திர உபகரணங்கள் தொடர்பாக வைத்திய அதிகாரிகளினால் சமூக சேவையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க நங்கொடையாளர்களினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பாடான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அவுஸ்ரேலியா தமிழ் பொறியியலாளர் தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஊடக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவுக்கு .தொடர்பாடல் ,மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும் ,மாவட்ட சிவில் சமூக அமைப்பின் போசகருமான ஜோசெப் பொன்னையா , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி , மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ் .மாமாங்கராஜா மற்றும் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் , மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.